Song:Kannan Oru Kai Kuzhandai
Film:Bathrakaali
Music: Illayaraja
Lyric : Vaali
Singers: K J Yesudoss, P Susheela
கண்ணன்ஒரு கைக்குழந்தை
கண்கள்சொல்லும் பூங்கவிதை
கன்னம்சிந்தும் தேனமுதை
கொண்டுசெல்லும் என்மனதை
கையிரண்டில் நானெடுத்துப்
பாடுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ
மாதவனே தாலேலோ
உன்மடியில் நானுறங்க
கண்ணிமைகள் தான்மயங்க
என்னதவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ
ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தமிந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள்வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா
அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளையிது
உன்னருகில் நானிருந்தால்
ஆனந்தத்தில் எல்லையது
காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும்வரம் கிடைக்கும்வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா
மஞ்சள்கொண்டு நீராடி
மைக்குழலில் பூச்சூடி
வஞ்சிமகள் வரும்போது
ஆசைவரும் ஒருகோடி
கட்டழகன் கண்களுக்கு
மையெடுத்து எழுதட்டுமா
கண்கள்படக் கூடும்என்று
பொட்டுஒன்று வைக்கட்டுமா
(கண்ணன் ஒரு)
----------------------------------------------------------------------------------
Saturday, August 8
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment